tamilnadu

img

இந்தியா கொரோனா பாதிப்பு  29 லட்சத்தை தாண்டியது...

தில்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் வியாழனன்று  ஒரே நாளில் 69 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று உறுதியானது. இது முன்எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சம் ஆகும்.

இந்நிலையில் வெள்ளியன்று காலை 8 மணியுடன் முடிந்த24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,இந்தியாவில் ஒரே நாளில் 62,282 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20.96 லட்சத்திலிருந்து 21.58 லட்சமானது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 983 பேர் உயிரிழந்தனர்.  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53,866லிருந்து 54,849 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.89 சதவீதமாக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 74.30 சதவீதமாக உள்ளது.

இதுவரை 3.34 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனைசெய்யப்பட்டுள்ளன.  ஒரே நாளில் 8.05 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;