tamilnadu

img

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் ம்ற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


 

;