tamilnadu

img

வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடும் நடவடிக்கை

வேலூர்:
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் பணப்பட்டு வாடாவை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.வேலூர் நாடாளுமன்ற தொகு திக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று தேர்தல் நடை பெற உள்ளது. இதையொட்டி அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.வேலூர் தொகுதியில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகள்குறித்து மாவட்ட ஆட்சியர்
சண்முகசுந்தரம் செய்தியாளர்களி டம் கூறியதாவது:

வேலூர் நாடாளுமன்ற தொகுதிவாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு மற்றும் வேலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ள டக்கியதாகும். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர் 102 பேர் உள்பட 14 லட்சத்து 26 ஆயிரத்து 991 பேர் வாக்களிக்க தகுதி யானவர்கள். தேர்தலில் வாக்களிக்க 690 வாக்குச்சாவடி மையங்களில் 1,553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. அதில் 133 வாக்குச்சாவடி பதற்றமானவைaயாக கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 133 நுண்பார்வை யாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.

தேர்தல் பணியில் 3,200 மத்திய, மாநில அரசு பணியாளர்கள் ஈடு படுத்தப்பட உள்ளனர். தேர்தலில் 1,880 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக் களித்தோம் என்பதை காட்டும் வி.வி. பேட்டுகளும் பயன்படுத்தப்படும். 
தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தவும் 24 மணி நேரமும்கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் 18 பறக்கும்படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் செயல்படும்.வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மனு நீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறை
தீர் நாள் கூட்டம், அரசு விழாக்கள் நடைபெறாது. மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற அலுவலகங்களும் தேர்தல் விதிமுறைக்காக பூட்டி சீல் வைக்கப்படும். ஏற்கனவே வேட்புமனு தாக்கல்செய்தவர்களின் டெபாசிட் தொகைஅவர்களின் வங்கிக்கணக்கில் வரவுவைக்க ஏற்பாடு செய்யப்படும். தேர்தலை அமைதியாக நடத்திட பொது மக்கள், அரசியல் கட்சியினர்முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.
 

;