தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

6 hours before
சென்னை விரைவு செய்திகள்
<p><strong>சென்னை விரைவு செய்திகள்</strong></p><p><strong>செங்குன்றம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>திருவள்ளூர், ஆக.16-திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு),செங்குன்றம் மற்றும் சோழவரம் பகுதி பேரவை கூட்டம் ஆக 15 அன்று காந்திநகரில் நடைபெற்றது.</p><p>பகுதி தலைவர் பி.சி.சங்கர் தலைமையில்பேரவை கூட்டம் நடைபெற்றது. சங்க கொடியை சிஐடியு மாவட்ட பொருளாளர் என்.நித்தியானந்தம் ஏற்றிவைத்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகி பி.நடேசன் துவக்கிவைத்து பேசினார்</p><p>சோழவரம் பகுதி செயலாளர் சா.வேலு வேலை அறிக்கையையும் வரவு செலவு கணக்கைபொருளாளர்து.வினோத்குமார் ஆகியோர் முன்மொழிந்தனர்.திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் மாநாட்டை நிறைவு செய்துபேசினார்.</p><p><br></p><p><strong>நிர்வாகிகள் தேர்வு</strong></p><p>பகுதி தலைவராக ஏ.ஜி.தேவநேசம், பகுதி செயலாளராக சா.வேலு, பொருளாளராக தூ.வினோத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.</p><p><br></p><p><strong>தீர்மானங்கள்</strong></p><p>செங்குன்றம் பகுதியில் பேருந்து நிலையத்தை உடனடியாக சீரமைத்து விரைவில் திறக்க வேண்டும், செங்குன்றம் பேருந்து நிலையம் ஆக. 31ஆம்தேதிக்குள் திறக்கப்படாவிட்டால் செப்.8 அன்று பொதுமக்களைதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.</p><p><br></p><p><strong>ஆரம்பாக்கத்தில் சிபிஐ நடைபயணம்</strong></p><p>திருவள்ளூர், ஆக.16-தேசத்தைப் பாதுகாப்போம், மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றுவோம் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆக 6 முதல் 15 வரை நடைபணம்மேற்கொண்டனர்.</p><p>அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் நடைப்பயண பிரச்சாரம் ஆக 14 அன்று</p><p>நடைபெற்றது. இதற்கு ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் எம்.ரவிக்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்சம்பூர்ணம்மாள் ராஜேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.சிபிஐ தேசிய குழு உறுப்பினர் வகிதா நிஜாம், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.அருள், சி.மாரி, சந்திரன் ஆகியோர்பேசினர்.</p><p><br></p><p><strong>விக்டோரியா அரங்கில் போர்க்கலை ஆயுதங்கள் கண்காட்சி தொடக்கம்!</strong></p><p>சென்னை, ஆக.16-சென்னை விக்டோரியா ஹாலில் தாட்கோ, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் ஆர்ட்ஃபுல் கலெக்டிவ்அமைப்பு இணைந்து நடத்திய மாணவர்-கலைஞர்கள் சந்திப்பு நிகழ்வில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாதிரிபள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும், 38மாதிரி பள்ளிப் பயிற்சியாளர்களும் இணைந்து பண்டைய தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் சிலம்பம்உள்ளிட்ட போர்க்கலை ஆயுதங்களை மாநில அளவில் காட்சிப்படுத்தினர்.இவ்விழாவைத் துவக்கிவைத்த பள்ளிக்கல்வி மற்றும்தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜமோகன் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், பத்மஸ்ரீ வேலு ஆசா உள்ளிட்ட பிரபல கலைஞர்களின் பொம்மலாட்டம், சிலம்பம்மற்றும் பறையாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளையும், சக்கரபாணம், வன சாட்டை, மதுவு, கதாயுதம் போன்றபாரம்பரிய போர்க்கலை ஆயுதங்களையும் பார்வையிட்டார்.மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் இளைய தலைமுறையினரிடம் நமது பண்பாட்டை மீட்டெடுக்கத் தாட்கோ மேலாண்மை இயக்குநர் எஸ். கந்தசாமி போன்றோரின் முயற்சியால்பல்வேறு பட்டறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.