ஓவேலியில் முதன்மை வன பாதுகாவலர் ஆய்வு!
8 hours before
<p><strong>ஓவேலியில் முதன்மை வன பாதுகாவலர் ஆய்வு!</strong></p><p>கூடலூர், செப்.3-ஓவேலி லாரஸ்டன் பகுதியில் 13 ஆவது நாளாக ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முதன்மை வன உயிரியல் பாதுகாப்பு அலுவலர் ராகேஷ் குமார் டோக்ரா அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.</p><p>நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் ஓவேலி லாரஸ்டன் பகுதியில் கடந்த மாதம் இருவரை புலி வேட்டையாடியது.இதையடுத்து ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி 200க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். </p><p>இந்நிலையில், புதனன்று ஓவேலி லாரஸ்டன் வந்த வன உயிரியல் பாதுகாப்பு அலுவலர் ராகேஷ் குமார் டோக்ரா,வனத்துறை அதிகாரிகளிடம் புலி நடமாட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். </p><p>புலி நடமாட்டம் இருக்கக்கூடிய முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள13 கூண்டுகளில் மாட்டிறைச்சி இரையாக வைக்கப்பட்டுள்ளது. </p><p>பாரம் குப்பைக் கிடங்கு மற்றும் திரிசந்திப்பு பகுதிகளில் உள்ள பெரிய கூண்டுகளில் மனித உருவ பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன.</p><p>இருப்பினும், இதுவரை புலி எந்தக் கூண்டிலும் சிக்கவில்லை. புலி வேறு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அண்டை வனக்கோட்டங்களிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இரண்டு கால்நடை மருத்துவர்கள் உதவியுடன், சில்வர் கிளவுட் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரைத்தள தேடுதல் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.</p>
