பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் சலுகை அல்ல; உரிமை: முதல்வர் விஜய்!
1 hour before
<p><strong>பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் சலுகை அல்ல; உரிமை: முதல்வர் விஜய்!</strong></p><p>சென்னை, ஆக. 12 -நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், தமது உரையில் பெண்களின்பங்களிப்பையும் அவர்களுக்கான அரசியல் உரிமையையும் வலியுறுத்தினார். பெண்களுக்கான அரசியல் இடம் என்பது சலுகை அல்ல, அது உரிமை என்றும், 33 சதவிகித இடஒதுக்கீட்டுச் சட்டம்நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்படுவதாகவும் விமர்சித்தார். </p><p><br></p><p><strong>சிறந்து விளங்கிய தமிழ்நாட்டுப் பெண்கள்</strong></p><p>உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததால் ஆயிரக்கணக்கான பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்துள்ளதாகவும், பேரவையில் நான்கு பெண் அமைச்சர்கள் உள்ளதாகவும் தெரிவித்த அவர், 33 சதவிகித இடஒதுக்கீட்டை தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், சங்ககாலம் தொடங்கி இன்று வரை அடையாளமாக விளங்கும் பெண் ஆளுமைகளைக் குறிப்பிட்டார். அவ்வையார், கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி, ஆண்டாள், காரைக்கால் அம்மையார் ஆகியோர் இலக்கியம் மற்றும் ஆன்மீகத் துறையில் உயர்ந்த இடம் பெற்றவர்கள் எனவும், ராணி வேலுநாச்சியார், குயிலி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அஞ்சலையம்மாள் ஆகியோர் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர்கள் எனவும் நினைவுகூர்ந்தார். </p><p><br></p><p><strong>50% இடங்கள் அதிகரிப்பு என்றாலும் பாதிப்பே!</strong></p><p>ஒவ்வொரு மாநிலத்திலும் 50 சதவிகிதம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், புதிய மக்கள் தொகைக்கணக்கெடுப்பிற்குப் பிறகு அதன் அடிப்படையில் தொகுதி மறுசீரமைக்கப்பட்டால் தென் மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை நாடாளுமன்றத்தில் குறையும் என எச்சரித்த அவர், மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்மாநிலங்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவ அநீதி ஏற்படும் என்பதால் 543 என்ற மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை நிரந்தரமாக நிலைநிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.</p><p><br></p><p><strong>மகளிருக்கான தொகுதி ஒதுக்கீடு!</strong></p><p>ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டு 131ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவையும், தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவையும் தாக்கல் செய்த போதிலும், 2026 ஏப்ரல் 17 அன்று மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் அந்த மசோதா நிறைவேறவில்லை என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். மகளிருக்கான தொகுதி ஒதுக்கீட்டை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைத்து ஒத்திவைக்கக் கூடாது என்றும், அதை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.</p><p><br></p><p><strong>தீர்மானத்திற்கு திமுக வரவேற்பு; அதிமுக - பாமக எதிர்ப்பு!</strong></p><p>முதல்வர் ஜோசப் விஜய் கொண்டுவந்த தீர்மானம் மீது, திமுக, அதிமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், விசிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள்உரையாற்றினர். அப்போது அவர்கள் கூறியதாவது:எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:“1971-ஆம் ஆண்டிலிருந்து, 2026-ஆம் ஆண்டு வரை, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் `தொகுதி மறுவரையறை நடைமுறையை’ மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அதற்கான புதிய சட்டத் திருத்தம், இந்த ஆண்டுக்குள் வரவில்லை என்றால், ‘2027 - மக்கள் தொகை அடிப்படையில்’ எம்.பி.க்கள் தொகுதிகள் நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அப்படிசெய்வதற்கான அதிகாரத்தை, அரசியலமைப்பு வழங்கி இருக்கிறது என்று, சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். </p><p>திமுக-வைப் பொறுத்தவரை, 33 சதவிகித மகளிர் இட ஒதுக்கீட்டை, நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம், வரவேற்கிறோம். ஒருவேளை மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்காகத் தொகுதி மறுவரையறை பணி செய்யப்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே செய்ய வேண்டும். அதில், ஏதாவது மாற்றம் வந்தால், நாடாளுமன்றத்தில், தமிழ்நாடு எம்.பி.க்களின் விகிதாச்சாரம் இப்போது இருக்கின்ற 7.18 சதவிகிதத்தைக் குறைக்க அனுமதிக்கக்கூடாது. இந்த வகையில், அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்!”.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.</p><p><br></p><p><strong>அதிமுக, பாமக எதிர்ப்பு</strong></p><p>அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழ்நாட்டுக்கு 1971 மக்கள்தொகை அடிப்படையில் 7.18 சதவிகித விகிதாச்சாரம் குறையக் கூடாது என்பதே தங்கள் நிலைப்பாடு” எனவும், “அந்த விகிதம்பாதுகாக்கப்பட்டால் தமிழகத்திற்கு 59 இடங்கள் கிடைக்கும்” எனவும் கூறினார். மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில் அரசியல் காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் அவசரமாகக் கொண்டுவரப்பட்டு உள்ளதால், அதிமுக இதனை எதிர்ப்பதாகவும், பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிப்பதாகவும் கூறினார்.பாமக-வின் கணேஷ்குமார், தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் 20 பெண்கள் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவார்கள்எனக் கூறி, முதலமைச்சர் தீர்மானத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். தீர்மானத்தை பாமக ஆதரிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.</p><p><br></p><p><strong>சிபிஐ - விசிக ஆதரவு</strong></p><p>சிபிஐ சட்டமன்றக்குழுத் தலைவர் டி. ராமச்சந்திரன் பேசுகையில், தென் மாநில குரல்வளை நசுக்கப்படுவதாகக் கூறி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார். விசிக சார்பில் அமைச்சர் வன்னிஅரசு, இது தென்னிந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டும் தீர்மானம் என வர்ணித்து ஆதரவளித்தார். </p><p><br></p><p><strong>குழப்பிய தேமுதிக!</strong></p><p>தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்எனவும், 33 சதவிகித பெண்கள் இடஒதுக்கீட்டை வரவேற்பதாகவும் கூறிய அவர், தீர்மானத்திற்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.</p><p><br></p><p><strong>காங்கிரஸ் - ஐயுஎம்எல் ஆதரவு</strong></p><p>அமைச்சர் ஷாஜகான் தீர்மானத்திற்கு வரவேற்பளித்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழ்நாடு அதிக வரி செலுத்தினும் குறைவான நிதியே பெறுவதாகவும், பாஜக அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாகவும் விமர்சித்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் மாநில சுயாட்சிக்காகக் குரல்கொடுத்ததை நினைவுகூர்ந்து, தொகுதி மறுவரையறையை முடக்கம்(freeze delimitation) செய்ய வேண்டியது அவசியம் எனவும், வட இந்தியாவின் ஆதிக்கத்தில் தென்மாநிலங்கள் விழுந்துவிடக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.தீர்மானம் ஆதாரமின்றி கொண்டு வரப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என விளக்கமளித்தார்.</p><p><br></p><p>தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜக சூழ்ச்சியை முறியடிப்போம்! </p><p>சிபிஎம் சட்டமன்றக்குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி பேச்சு</p><p><br></p><p><strong>முதலமைச்சர் கொண்டுவந்த அரசினர் தனித்தீர்மானம் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி பேசியதாவது:</strong></p><p><br></p><p><strong>கட்டுப்பாட்டுக்கு தண்டனையா? </strong></p><p>முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனதார வரவேற்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளை மறுவரையறை செய்து உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது. இதன் மூலம் இந்திய அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கொள்கைகளைச் சீரழிக்கிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்குத் தண்டனை அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஏற்கெனவே 1976-ஆம் ஆண்டு மறுசீரமைப்பின் போது, தமிழ்நாட்டிற்கான மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை 41-இல் இருந்து 39 ஆகக் குறைக்கப்பட்டது.தமக்கு செல்வாக்கு உள்ள வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பதும், தென் மாநிலங்களில் குறைப்பதும் பாஜகவின் நோக்கமாகும். இதனாலேயே, மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பே 858 உறுப்பினர்கள் அமர்வதற்கான புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டியது.</p><p><br></p><p><strong>பிரித்தாளும் சூழ்ச்சி இது!</strong></p><p>சிறுபான்மையின மக்கள் (குறிப்பாக இஸ்லாமியர்கள்) வாழும் பகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதால் எல்லைகளைப் பிரிக்கவும், தலித் மற்றும் ஏழை மக்களைப் பிரிக்கவும் பாஜக முயல்கிறது.மாநிலங்களின் ஆலோசனை இல்லாமல் எல்லைகளை நிர்ணயிக்கக் கூடாது. அனைத்துக் கட்சிகளுடனும், மாநில அரசுகளுடனும் விரிவாகப் பேசிய பிறகே நிலைப்பாடு எடுக்க வேண்டும்; அதுவரை 543 எம்.பி.க்கள் எண்ணிக்கையில் மாற்றமிருக்கக் கூடாது. 543 உறுப்பினர்களுக்கே பேச முழு வாய்ப்பு கிடைக்காத போது, 850 ஆக உயர்த்தினால் பேசும் நேரம் மேலும் கேள்விக்குறியாகும்.</p><p><br></p><p><strong>543 இடங்களுக்குள் 33% இடஒதுக்கீடு</strong></p><p>மகளிர் இடஒதுக்கீடு: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் மகளிர் இடஒதுக்கீட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே 2029-இல் தற்போதுள்ள 543 இடங்களுக்குள்</p><p>ளேயே மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கி தேர்தலை நடத்த வேண்டும்.இவ்வாறு ஆர். செல்லசுவாமி கூறினார்.</p><p><br></p><p><strong>மகளிர் இடஒதுக்கீடு ஆதரவு தீர்மானம் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு வரவேற்பு!</strong></p><p>நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் பெண்</p><p>களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.</p><p>இந்நிலையில், தங்களின் கோரிக்கையை ஏற்றுத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கும் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு தமதுநெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து வரவேற்பதாக கூறியுள்ளது.</p><p>நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், மக்கள் தொகை </p><p>கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற காரணங்களைக் கூறி ஒன்றிய பாஜக அரசு இதன் அமலாக்கத்தைக் காலவரையின்றி தாமதப்படுத்தி வருவது இந்திய பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். </p><p>இதனை எதிர்த்து கடந்த ஜூலை 29 அன்று அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து உரிய வலியுறுத்தல் விடுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து, பெண்களின் உரிமையை முடக்கக் கூடாது என வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்களின் நீண்டகால ஜனநாயக உரிமைக்கான இந்தப் போராட்ட வெற்றியைகூட்டமைப்பு பாராட்டுகிறது.</p><p>இந்தியாவில் சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண் விடுதலைக்கான குரல் எப்போதும் தமிழகத்திலிருந்து தொடங்கி மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ளது. அதேபோன்று, இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தக் கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் இந்தக் குரலும் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என அனைத்து பெண்கள் கூட்டமைப்பின் அறிக்கையில்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.</p>
