பொதுத்துறைகளை தனியார்மயமாக்கி இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் ஒன்றிய அரசுசென்னை பிரச்சாரத்தில் ஜி.ராமகிருஷ்ணன் சாடல்
8 hours before
<p><strong>பொதுத்துறைகளை தனியார்மயமாக்கி இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் ஒன்றிய அரசுசென்னை பிரச்சாரத்தில் ஜி.ராமகிருஷ்ணன் சாடல்</strong></p><p>சென்னை, ஆக. 27 –பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி இடஒதுக்கீட்டை ஒன்றிய பாஜக அரசு ஒழித்து கட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். வியாழக்கிழமையன்று (ஆக. 27)வில்லிவாக்கம் பகுதி அயனாவரம் மார்க்கெட், மற்றும் அண்ணாநகர் பகுதி குஜ்ஜி தெருவில் மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடங்கி வைத்து துண்டறிக்கை வழங்கிப் பிரச்சாரம் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்ஆகஸ்ட் 26 முதல் 31 வரை தமிழ்நாடுமுழுவதும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். </p><p>இதில் வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை வெளியிட்டு மகத்தான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். பல கிராமங்கள் மற்றும்நகரங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டிக் குடியிருப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டுமஎன்றும், தமிழ்நாட்டில் ஒருகோடிக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக,தலைமைச் செயலகம் மற்றும் அரசுத் துறைகளில் உள்ள பல லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாகநிரப்பிப் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரினார்.மேலும் அவர் கூறுகையில், “அரசுப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒன்றிய அரசு,பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் 12 துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களைத் தனியார்மயமாக்கி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கி அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதால், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர், பழங்்குடியினருக்கான இடஒதுக்கீடு அர்த்தமற்றுப் போய்விடுகிறது.</p><p>செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஜி.ராமகிருஷ்ணன், புதிய விமான நிலையம் அமைக்கும் பொழுதோ அல்லது இருக்கும் விமானநிலையத்தை விரிவுபடுத்தும் பொழுதோ, சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.கடந்த காலத்தில் எம்.எல்.ஏ.க்கள் சொந்தமாகவோ அல்லது வாடகையிலோ கார்கள் வைத்திருந்தாலும் அவர்களுக்குப் பெட்ரோல் படிவழங்கப்பட்டது. கார் வாங்குவது ஆடம்பரச் செலவாகக் கருதப்படுவதால் இதனைத் தவிர்க்க வேண்டும். அரசு நிர்வாகமும் அதிகாரிகளும் மக்கள்நலனைப் பாதுகாப்பதற்காகவே செயல்பட வேண்டுமே தவிர, மக்களின்உரிமைகளைப் பறிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரோ, வட்டாட்சியரோ அல்லது தலைமைச் செயலாளரோசெயல்படக் கூடாது என்றார்.</p><p>வில்லிவாக்கத்தில் உள்ள ஓட்டேரிநல்லா கால்வாய் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நீர்ப்பாசனத்திற்காக உருவாக்கப்பட்டது. தற்போது சாகுபடி ஏதுமில்லாததால் அது சாக்கடையாக மாறி சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குகிறது. எனவே, மாநகராட்சி மற்றும் மாநில அரசு நிர்வாகம் உடனடியாக இக்கால்வாயைச் சீரமைத்துச் சுத்திகரிக்க வேண்டும். அரசு உதவிபெறும் சிங்காரம் பிள்ளை பள்ளியின் இடத்தை வணிக வளாகமாக மாற்றியுள்ளனர். இதனால் இந்தப் பள்ளிகளை நம்பியுள்ள ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பக் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அரசுப்பள்ளிகளையும் அரசு உதவிபெறும் பள்ளிகளையும் அரசு பாதுகாத்தால் மட்டுமே ஏழை எளிய குடும்பங்களைச்சார்ந்த குழந்தைகளுக்குக் கல்வி வழங்க முடியும்” என்றார்.</p><p>கடந்த ஜூலை 28 அன்று தலைமைச்செயலாளர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆணையம் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், “இடதுசாரி மாணவர் சங்கங்கள் கரப்பான் பூச்சி கட்சியோடு சேர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும், அதைத் தடுக்கஎடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்ததகவலை அனுப்பவும்”என உத்தரவிடப்ட்டுள்ளதாகத்தகவல்கள்வெளியாகியுள்ளன. அரசுச் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்பட்ட அந்தத் தலைமைச் செயலாளரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கக் கூடாது;மாநிலஅரசும் இதுபோன்ற விஷயங்களில் மவுனமாக இருக்கக் கூடாது என்றும்ராமகிருஷ்ணன் கூறினார்.இக்கூட்டத்திற்குப் பகுதிச் செயலாளர் சி.மார்ட்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வேசன், கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.மதியழகன், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜி.அன்பழகன், டேவிட், யூஜின் பர்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>
