தீக்கதிர் உலக செய்திகள்
yesterday
<p><strong>காசா போர் நிறுத்த ஒப்பந்தம் :இரண்டாம் கட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புதல்</strong></p><p>காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கான வழிமுறைகளின் இறுதி வரைவுக்கான ஒப்புதலை ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எகிப்து, கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தர்கள் இந்த ஒப்பந்தங்களை இறுதி செய்து அறிவிப்பதற்கு முன்பு, தற்போது இஸ்ரேலின் பதிலுக்காகக் காத்திருக்கின்றன. அதேபோல பாலஸ்தீன தேசியக் குழுவின் மேற்பார்வையின் கீழ் ஹமாஸ் அமைப்பின் ஆயுதங்களைப் பதிவு செய்து சேமிக்கும்செயல்முறைகள் இதில் அடங்கும். இது ஆயுத ஒப்படைப்பு அல்ல. இஸ்ரேல் ராணுவம் காசாவை விட்டுவெளியேறுவதுடன் இந்த ஒப்பந்தம் இணைந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.</p><p><strong>ஐரோப்பாவில் காட்டுத்தீ 10,72,437 ஏக்கர் அழிந்தது </strong></p><p>ஐரோப்பாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 10,72,437 ஏக்கருக்கும் (4,34,000 ஹெக்டேர்) அதிகமான நிலப்பரப்பு அழிந்துபோயுள்ளதாக ஐ.நா அவையின் ஐரோப்பிய பொருளாதார ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. வெப்ப அலை, வறட்சி மற்றும் பலத்த காற்று ஆகியவை ஆகஸ்ட் மாதம் வரை தொடரும் என்பதால், இந்த நிலைமைமேலும் மோசமாகும் என கூறப்பட்டுள்ளது. தற்போது காட்டுத்தீ கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.</p><p><strong>உலக அமைதியை சீர்குலைக்கும் டிரம்ப்</strong></p><p>டெஹ்ரான், ஜூலை 31-உலக அமைதியில் சிறிதும் விருப்பம் இல்லாத டிரம்ப்மீண்டும் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி மேற்கு ஆசியாவில் போரை தீவிரமாக்கி வருகிறார்.அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே மோதல்கள் நடந்தாலும் அமைதிப்பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மத்தியஸ்தரான பாகிஸ்தான் கூறியுள்ளது.</p><p>அமைதியை தொடர்வதாக ஏற்றுக்கொண்ட ஒப்பந்தத்தை மீறி ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களுக்கு ஈரானும் தகுந்த பதிலடிகள் கொடுத்த வந்தது. இந்நிலையில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்படைத்தளம் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. மேலும் இராக்கில் உள்ளஈரான் ஆதரவு அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, “இது நாங்கள் அவர்களைத் (ஈரானை) தாக்கும் நேரம் “ என்று டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், ஈரான்மீது அமெரிக்கா “சக்திவாய்ந்த” குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது.</p><p>புதன்கிழமை மேற்கு ஆசிய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகள் தாக்கப்பட்டன? தாக்குதலுக்கு எத்தனை விமானங்கள் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன? இந்த தாக்குதல்கள் எத்தனை நாட்கள் தொடரும் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.அமெரிக்காவின் தாக்குதல் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஈரானின் தெற்குப் பகுதிகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தென்மேற்கு நகரான அபதான் மற்றும் கெஷம் தீவு மற்றும் தெற்குத் துறைமுகநகரான புஷெர் ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில்ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ‘பிரஸ் டிவி’ தெரிவித்துள்ளது. எனினும், உடனடியாக பாதிப்புகள் பலி எண்ணிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.</p><p><br></p>
