அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியவில்லைசெல்போன் சிக்னல் இல்லாமல்
9 hours before
<p><strong>அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியவில்லைசெல்போன் சிக்னல் இல்லாமல் </strong></p><p>அரசு மருத்துவமனையில் அவதி</p><p>கள்ளக்குறிச்சி, ஆக.27 -கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.</p><p>ஆனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் மருத்துவமனை, மருத்துவர்கள் குடியிருப்பு, செவிலியர்கள் குடியிருப்பு, மாணவர்கள் விடுதி என எங்கும் எந்த நிறுவன செல்போனுக்கும் சிக்னல் கிடைப்பதில்லை.</p><p>இதனால் உள்நோயாளிகளின் உறவினர்களை அவசரத்திற்கு தொடர்பு கொள்ள முடியவில்லை. மருத்துவர்கள் கூட மருத்துவமனைக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. பெரும் விபத்து காலங்களில் அதிகாரிகள் தகவல் பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. நிர்வாக அலுவலகத்தில் இணைய வசதி கூட இல்லை.</p><p>இது குறித்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே வளாகத்திற்குள் தடையின்றி நெட்வொர்க் கிடைக்க பிஎஸ்என்எல் அல்லது தனியார் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p><p><br></p>
