சேதமடைந்த கால்வாய் சரிசெய்யுமா நிர்வாகம்?
6 hours before
<p><strong>சேதமடைந்த கால்வாய் சரிசெய்யுமா நிர்வாகம்?</strong></p><p>கள்ளக்குறிச்சி,செப்.11-கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராய பாளை யம் அருகே உள்ள மாத்தூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நுழைவு வாயில் கேட் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாய் கடு மையாக சேதமடைந்து காணப்படுகிறது.</p><p>கால்வாயின் மேல் மூடி உடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலை யில், பள்ளம் போல் காட்சி யளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.</p><p>எனவே, மாணவர்களின் நலன் கருதி, உடைந்த கால்வாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாக மும், மாவட்ட நிர்வாக மும் நடவடிக்கை எடுக்க</p><p>வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.</p><p><br></p>
