போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.60 லட்சம் நிலம் விற்பனை: நிலத்தரகர் கைது
2 hours before
<p><strong>போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.60 லட்சம் நிலம் விற்பனை: நிலத்தரகர் கைது</strong></p><p>அம்பத்தூர், ஜூலை 31-சென்னை வேளச்சேரி லட்சுமி நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (71). கடந்த 2010ஆம் ஆண்டு ஏழுமலை பூந்தமல்லி அருகே நேமம் கிராமத்தில் சிவசுப்பிரமணியம், வெங்கடேசன் மற்றும் ஜானகிராமன் ஆகியோர் 3,975 சதுரஅடி பூர்வீக நிலத்தை ஏழுமலைக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்துள்ளனர். </p><p>அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஜானகிராமன், ஏழுமலைக்கு பொது அதிகாரம் கொடுத்ததை மறைத்து, போலி ஆவணங்கள் தயாரித்து, அவரது மனைவி செல்வமணி பெயரில் செட்டில்மென்ட் எழுதி கொடுத்துள்ளார். அவர், அந்த நிலத்தை தயாளன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.</p><p>கடந்த 2023ஆம் ஆண்டு ஏழுமலை மேற்படி நிலத்தை சென்று பார்த்த போது, தயாளன் என்பவர் கம்பி வேலி போட்டு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏழுமலை வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, நிலத்தை மோசடி செய்தது தெரியவந்தது. அந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.60 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து ஏழுமலை, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த சென்னை தி.நகர் மேத்தா தெருவைச் சேர்ந்த நிலத்தரகர் ஜானகிராமன் (67) என்பவரை வியாழனன்று காவல் துறையினர் கைது செய்தனர்.</p>
