விவசாயிகள் சந்திப்பு கூட்டம்...
2 hours before
<p><strong>விவசாயிகள் சந்திப்பு கூட்டம்...</strong></p><p>திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தில் ‘என் பட்டு என் பெருமை 2.0’ என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மத்தியப்பட்டு வாரிய விஞ்ஞானி கார்த்திக் மணி பாரதி கூட்டத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறியப்பட்டது. மேலும் வாணியம்பாடி உதவி இயக்குநர் அலுவலக ஆய்வாளர் யுவராஜ் மற்றும் இளநிலை பட்டு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.</p>
