தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்”

5 Aug 2026, 8:33 pm
“3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்”
<p><strong>“3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும்”</strong></p><p>3 கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைஉறுப்பினர் பி.சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”எதிர்க்கட்சிகளின் 3 கோரிக்கைகளில் முதலாவதாக, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது அரசாங்கம் அளித்த முக்கிய வாக்குறுதி மிக முக்கியமானது.உச்சநீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள போதிலும், மாநில அந்தஸ்து இன்னும்மீட்டெடுக்கப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீண்டும்வழங்குவதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இரண்டாவதாக, ராமர் கோவில் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.</p><p> இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். மூன்றாவதாக, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தடியடி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து அறிக்கை வெளியிட வேண்டும். இந்த 3 கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை”போராட்டம் தொடரும் என பி.சந்தோஷ் குமார் எம்.பி., கூறியுள்ளார்.</p><p><br></p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.