முந்தய பக்கம்

ராணிப்பேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

6 Aug 2026, 12:32 am
ராணிப்பேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு
<p><strong>ராணிப்பேட்டை ஊராட்சிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு</strong></p><p>ராணிப்பேட்டை,ஆக.5–ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடும்புலி மற்றும் நாகவேடு ஊராட்சி களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணி களை மாவட்ட ஆட்சியர் ந.பிரியா ரவிச்சந்திரன் செவ்வாயன்று (ஆக. 4) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.</p><p>நெடும்புலி மற்றும் நாக வேடு ஊராட்சிகளில் ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் நடை</p><p>பெற்று வரும் புதிய குளம்வெட்டும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சி யர் உத்தரவிட்டார். தொடர்ந்து, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பயனாளிகளி டம் அவர் கேட்டறிந்தார்.</p><p>மேலும், நாகவேடு ஊராட்சியில் இந்திய மக்கள் தொகை கணக் கெடுப்பு 2027 பணிகளின்</p><p>முன்னேற்றம் மற்றும்திடக்கழிவு மேலாண்மை மையத்தின் செயல்பாடு களை ஆட்சியர் பார்வையிட்டு அதிகாரி களுக்கு அறிவுரைகளை வழங்கி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram