ராணிப்பேட்டை ஆட்சியர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்
2 hours before
<p>ராணிப்பேட்டை ஆட்சியர் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்</p><p>ராணிப்பேட்டை,ஜூலை 31- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலானகல்விக் கட்டுப்பாட்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ந. ப்ரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாண வர்களின் கல்வி வளர்ச்சி, பள்ளி நிகழ்ச்சிகள், நலத்திட்டங்கள் மற்றும் இணையதளப்பதிவுகளை விரைவுபடுத்துதல் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பள்ளிகளுக்கானஉள்கட்டமைப்புத் தேவைகள் குறித்துக் கேட்ட றிந்த ஆட்சியர், அரசின்திட்டங்களை விரைந்து செயல்படுத்த அதிகாரிக ளுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p><p><br></p>
