அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட பேரவை
9 hours before
<p><strong>அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட பேரவை</strong></p><p>சேலம், ஆக.9-காலிப்பணியிடங்களை நிரப்பி ஊழியர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் என சேலம் அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p><p>தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை அண்ணா பூங்கா அருகில் உள்ளபொறியாளர் மாளிகையில் சனியன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வெ.அர்த்தனாரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மா.ராணி வரவேற்றார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர்சா.டேனியல் ஜெயசிங் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ், பொருளாளர் அ.சண்முகம் ஆகியோர் அறிக்கைகளை சமர்பித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் டி.உதயகுமார், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.அருள்மொழி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ந.பெரியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். </p><p>இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பி, ஊழியர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும். தகுதிவாய்ந்த அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். </p><p>அரசு பணிகளை செய்யும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதியம் மதிப்பூதியம் வழங்கும் நிலையை மாற்றி, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்</p><p>கள் நிறைவேற்றப்பட்டன. அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கே.மகாலிங்கம் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் த.ஜான் ஆஸ்டின் நன்றி கூறினார்.</p>
