சங்க அங்கீகார தேர்தலை நடத்த கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா
1 hour before
<p><strong>சங்க அங்கீகார தேர்தலை நடத்த கோரி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா</strong></p><p>சங்கராபுரம், ஆக.20-கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த கோரியும், தற்காலிக பணியாளர்களை வைத்து ரேஷன் கடைக்கு பொருட்களை ஏற்றக்கூடாது என்று வலியுறுத்தியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கராபுரம் நுகர்பொருள் வாணிப கழக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும். நிலுவையில் உள்ள கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.</p>
