தரக்கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
13 Aug 2026, 9:34 pm
<p><strong>தரக்கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்</strong></p><p>பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவிலான சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்புச் சத்துக்கள் இருந்தால்,அவற்றின் முன்பகுதியில் எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப்படுத்தத் தயங்கும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) அடாவடிக்கு எதிராக தொடரப்பட்டபொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ தரப்பு வாதங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா,கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு,”நீங்கள் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ)நீதிமன்றத்தை கேலியாக நினைக்கிறீர்களா? அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் தரப்பிலிருந்தும் உங்களுக்கு அழுத்தம் உள்ளது. </p><p>அந்த அழுத்தத்திற்கு நீங்கள் அடிபணிகிறீர்கள். அதை மனதில் கொள்ளுங்கள். எங்கள் உத்தரவை நீங்கள் ஏன் மதிக்கவில்லை? இதுவரை என்ன செய்துள்ளீர்கள்? உங்கள் மீதுள்ள அழுத்தம் எங்களுக்குத் தெரியும். நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? நீங்களாகவே இதைச் செய்வீர்களா அல்லது நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா?. இதுவே உங்களுக்கு (ஒன்றிய அரசுக்கு) கடைசி வாய்ப்பு. அடுத்த முறை நாங்கள் தீர்ப்பை வழங்குவோம்” என கடும் கண்டனம் தெரிவித்து,ஒன்றிய அரசு மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ இந்த விவகாரத்தில் தங்களின் இறுதி முடிவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கஇரண்டுவார கால அவகாசம் வழங்கியுள்ளது.</p><p><br></p>
