தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டின் இரு தொகுதிகளுக்கு அக்.6-இல் இடைத்தேர்தல்!

yesterday
தமிழ்நாட்டின் இரு தொகுதிகளுக்கு அக்.6-இல் இடைத்தேர்தல்!
<p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, அதி​முக எம்​எல்​ஏ-க்​களாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மரகதம் குமர​வேல் (மதுராந்தகம்), சத்​தி​ய​பா​மா (தாராபுரம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), இசக்கி சுப்பை​யா (அம்பாசமுத்திரம்), சி.​விஜய​பாஸ்​கர் (விராலிமலை), எம்.ஆர்​.​விஜய​பாஸ்​கர் (கரூர்) ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினமா செய்திவிட்டு தவெக-வில் இணைந்தனர். இதை தொடர்ந்து இந்த தொகுதிகள் காலியானதான சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p><p>இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 16-ஆம் தேதி; வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 17 ஆம் தேதி; வேட்புமனுவை திரும்பப்பெற கடைசிநாள் செப்டம்பர் 19-ஆம் தேதி; வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.</p><p>அதே போல், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, அசாமின் நாகுன், மேற்கு வங்கத்தின் ரெஜிநகர் மற்றும் நந்திகிராம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.