தமிழ்நாட்டின் இரு தொகுதிகளுக்கு அக்.6-இல் இடைத்தேர்தல்!
yesterday
<p>தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, அதிமுக எம்எல்ஏ-க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினமா செய்திவிட்டு தவெக-வில் இணைந்தனர். இதை தொடர்ந்து இந்த தொகுதிகள் காலியானதான சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.</p><p>இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 16-ஆம் தேதி; வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 17 ஆம் தேதி; வேட்புமனுவை திரும்பப்பெற கடைசிநாள் செப்டம்பர் 19-ஆம் தேதி; வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.</p><p>அதே போல், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, அசாமின் நாகுன், மேற்கு வங்கத்தின் ரெஜிநகர் மற்றும் நந்திகிராம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. </p>
