இடைத்தேர்தல்: சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு!
yesterday
<p>தமிழ்நாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் சிபிஎம் மற்றும் சிபிஐ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.</p><p>தமிழ்நாட்டில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதால், ஆக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஆக்.9 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.</p><p>இதைத் தொடர்ந்து திமுக, தவெக, அதிமுக, நதக ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். </p><p>இந்த சூழலில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், வேட்பாளர்கள் செப்.15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.</p><p>இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பா.லட்சுமணனுன் போட்டியிடுவதாக சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்-எல்)விடுதலை தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். மேலும், இவர்கள் நாளை வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கின்றனர்.</p>
