முந்தய பக்கம்

வேளாங்கண்ணி பக்தர்களுக்கு தமிமுன் அன்சாரி அலுவலகத்தில் வசதி

10 hours before
வேளாங்கண்ணி பக்தர்களுக்கு தமிமுன் அன்சாரி அலுவலகத்தில் வசதி
<p><strong>வேளாங்கண்ணி பக்தர்களுக்கு தமிமுன் அன்சாரி அலுவலகத்தில் வசதி</strong></p><p>சிதம்பரம், ஆக 26-வேளாங்கண்ணி பேராலயத்திற்கு பாத யாத்திரையாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வழியாக தினம்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். இவர்களுக்கு மத பாகு பாடுகள் இல்லாமல் பல இடங்களில் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பல தரப்பினர் செய்து வரு கின்றனர்.</p><p>இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை மதியம் புதுச்சேரியில் இருந்து தமிழக நிதித்துறை அமைச்சர் மரியம் வில்சன் பாதயாத்திரையை தொடங்கி புதன்கிழமை சிதம்பரம் வழியாக சென்றார்.</p><p>இந்நிலையில் வேளாங்கண்ணிக்கு சிதம்பரம் வழியாக பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சிதம்பரம் எம்எல்ஏ அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.</p><p>இதுகுறித்து அவர் கூறியதாவது: பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தை பயன் படுத்திக் கொள்ளலாம். அங்கு ஓய்வெடுப்பதோடு தேவையான அடிப்படை வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.பாது காப்பாகவும், சிரமமின்றி தங்களது பயணத்தைத் தொடரலாம் என்று தமிமுன்அன்சாரி தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram