தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட எச்சரிக்கை எதிரொலி பட்டியலின மக்களின் நிலங்களை ஒப்படைக்க தாசில்தார் ஒப்புதல்

14 Aug 2026, 11:00 pm
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட எச்சரிக்கை எதிரொலி பட்டியலின மக்களின் நிலங்களை ஒப்படைக்க தாசில்தார் ஒப்புதல்
<p><strong>தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்ட எச்சரிக்கை எதிரொலி பட்டியலின மக்களின் நிலங்களை ஒப்படைக்க தாசில்தார் ஒப்புதல்</strong></p><p>திருச்சிராப்பள்ளி, ஆக. 14-திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் வட்டம், உன்னியூர் வருவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டியலின மக்கள் 42 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலங்களை இதுநாள் வரை அளந்து ஒப்படைக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தொட்டியம் தாலுகா அலுவலகம் முன்பு வியாழனன்று காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.</p><p>இதனைத் தொடர்ந்து, தொட்டியம் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் இரா.முத்துக்குமார், துணைச் செயலாளர் வீரவிஜயன் மற்றும் துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p><p>பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட நிலம் நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதா கவும், நில அளவைக்கான அரசுக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தவுடன் உடனடியாக நிலத்தை அளந்து </p><p>பயனாளிகளிடம் ஒப்படைப்ப தாகவும் அதிகாரிகள் உறுதி</p><p>யளித்தனர். இதையேற்று, காத்திருக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்ப தாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.