districts

img

கோவை: மேட்டுப்பாளையத்தில் காவல்துறையினர் கொடி அணி வகுப்பு

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்ன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறையினர்,  ஊர்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் என‌ சுமார் 283 பேர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;