districts

img

காலமானார்

சென்னை, ஜூலை 4 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி குழு உறுப்பினரும், மாற்றுத்திறனாளி சங்க மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளருமான தி.சிவக்குமாரின் தாயார் சௌந்தரி அம்மாள் ஞாயிறன்று (ஜூலை 3) காலமானார். அவருக்கு வயது 75. சாலை விபத்தில் படுகாயமுற்ற அவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். தி.நகர் பார்த்தசாரதி புரத்தில்  வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பி சம்பத், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் எஸ்.கே முருகேஷ், வெ.ஆறுமுகம், பகுதிச் செயலாளர் வெ.ரவீந்திர பாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் மகேந்திரவர்மன், மாற்றுத்திறனாளி சங்க மாநில துணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி  உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் திங்களன்று (ஜூலை 4) நுங்கம்பாக்கம் மின்ம யானத்தில் தகனம் செய்யப்பட்டது.

;