districts

img

காலமானார்

சென்னை, டிச. 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லெனின் நகர் முன்னாள் கிளைச் செயலாளர் வி.சுரேந்திரன் (86) செவ்வாயன்று (டிச. 13) காலமானார். அவர்  மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி னார்.  தனது குடும்பத்தினரை முழுவதுமாக கட்சியில் இணைத்தார். மேலும் தான் வசித்த லெனின் நகர் பகுதியில் ஏராளமான பிரச்சினைகளுக்காக போராடியவர். தனது இறுதிவரை கட்சி நடத்தும் அனைத்து இயக்கங்களிலும் பங்கேற்றார். அவரது உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.பூபாளன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சு.லெனின்சுந்தர், சி.சுந்தரராஜன், அம்பத்தூர் பகுதி செயலாளர் ஆர்.கோபி, ஆவடி பகுதி செயலாளர் அ.ஜான், சிஐடியு அம்பத்தூர் பகுதி தலைவர் சு.பால்சாமி, பி.என்.உண்ணி, ஜி.மூர்த்தி, கே.கிருஷ்ணசாமி, நந்தகோபால், உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.  அவரது உடல் புதனன்று (டிச. 14) அம்பத்தூர் டன்லப் அருகே உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

;