தஞ்சாவூர், அக்.30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த மாணவி பிரீத்திகா. இவரது தந்தை தியாகராஜன், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். மாணவி பொறியியல் பட்டப் படிப்பில் சேரவுள்ளார். மாணவியின் ஏழ்மையான குடும்பச் சூழ்நிலை குறித்து அறிந்த, மருத்துவர் துரை.நீலகண்டன், தனது சொந்தப் பணம் மற்றும் பேராவூரணி லயன்ஸ் சங்கம் இணைந்து ரூ.15 ஆயிரத்தை மாணவியிடம் வழங்கி னர். அப்போது, லயன்ஸ் சங்கத் தலைவர் செ.ராம நாதன், பொருளாளர் பன்னீர்செல்வம், லயன்ஸ் நிர்வாகி கள் ஆர்.பி.ராஜேந்திரன், ஜி.ராஜா, மாணவியின் தந்தை தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.