districts

img

நீடூர், நெய்வாசலில் தமுமுக, மமகவினர் நீர் மோர் பந்தல் திறப்பு

மயிலாடுதுறை,  ஏப்.26 - மயிலாடுதுறை மாவட் டம் நீடூர், நெய்வாசல் பகுதிகளில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது. நீடூர் கிளை தலைவர் சல்மான் பாரிஸ் தலைமை யில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் டிஎஸ்ஆர் முகமது ஃபாரூக் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கூறை நாடு பாசித், கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், திமுக மாவட்ட சிறுபான்மையினர் அணிச் செயலாளர் வடகரை  ஹாப்பி அர்ஷத் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். ஐபிபி மண்டலச் செயலா ளர் ரியாஜுதீன், தமுமுக மாவட்ட துணைச் செயலா ளர் முஹமது ரஃபிக், ஒன்றிய  நிர்வாகிகள் ஆசிக் நிஜாம், கிளை பொருளாளர் தாஜு தீன், செயலாளர் நிசார் மற்றும் ரியாத் மண்டல சயீது  ரஹ்மான், நீடூர் ஊராட்சி மன்றத் தலைவர் அருள், கங்கணாபுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுகன்யா ராஜா, நீடூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்  செல்வராஜ் மற்றும் நீடூர்  முத்தவல்லி நாசர், ஜமாத்தார் கள், பொதுமக்கள் நீர்மோர் வழங்கி சிறப்பித்தனர்.

;