districts

வெறுப்பு அரசியலை விதைக்கிறார் மோடி

புதுக்கோட்டை, ஏப்.17 - மோடி நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செவ்வாய் க்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் முஸ்லிம் லீக் வேட்பா ளர் நவாஸ்கனியை ஆதரித்து அவர் மேலும் பேசியதாவது: பொய் சொல்வதிலேயே உலகத் தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. அவ ருக்கு உண்மையே பேசத் தெரியாது. இந்தத் தேர்தல் வழக்கமான இரு  நபர்கள், இரு கட்சிகளுக்கு  இடையே  நடக்கும் தேர்தல் அல்ல. இது முழுக்க  ஜனநாயகத்துக்கும், எதேச்சாதிகாரத்துக் கும் நடைபெறும் போட்டி. எப்போது வர வேண்டுமோ, அப்போ தெல்லாம் வராதவர் தேர்தல் வந்ததும் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வரு கிறார் என்று கவனியுங்கள். எத்தனை புயல், எத்தனை வறட்சி ஏற்பட்டது. அப் போது மோடி வந்தாரா? மக்களாட்சியில் மக்கள் நிதியைத் தர மறுத்தார். பொய் சொல்லும் அணி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு களுக்குச் செல்லும்போது அமைச்சர் களை, அதிகாரிகளை உடன்  அழைத்துச் செல்கிறார். ஆனால்,  பிரதமர் மோடி  வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அவரின் நண்பர்களான தொழிலதிபர்களை அழைத்துச் செல்கிறார். ஆனால் அவர்தான் ஏழைகளின் நண்பர் என்கிறார். தமிழ்நாடு வரும்போதெல்லாம் வள்ளுவரையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார் மோடி. தமிழ் நாட்டில் இருந்து ஒரு வள்ளுவர் சிலையை எடுத்துச் சென்றார்களே, அது  இப்போது எங்கே இருக்கிறது என யாருக்காவது தெரியுமா? சொன்னதைச் செய்யும் அணியாக திமுக அணி இருக்கிறது. பொய் மட்டுமே  சொல்லும் அணியாக பாஜக அணி இருக்கிறது. திமுகவை அழிப்பேன், காங்கிரஸை அழிப்பேன் என்றுதான் சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்து என்ன செய்தோம் எனச் சொல்வதில்லை. நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை விதைத்து வரு கிறார் மோடி. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திராவிடர் கழகத்தின் மாநிலத் துணைப் பொதுச்  செயலர் துரை.சந்திரசேகரன் உள்ளிட் டோரும் பேசினர்.

;