districts

img

மோடிக்கு பணக்காரர்களை மட்டும்தான் பிடிக்கும்

கீழ்வேளூர் பொதுக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் உரை

நாகப்பட்டினம், ஏப்.15- பிரதமர் மோடிக்கு ஏழைகளைப் பிடிக்காது; உலகப் பணக்காரர்களை மட்டும்தான் பிடிக்கும் என்றார் கே.பால கிருஷ்ணன். நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வை. செல்வ ராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்குக் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உரையாற்றினார். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து வரவேற்புரை ஆற்றி னார். திமுக மாவட்டச் செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சா ரங்களில், ‘ஒரிஜினல் விவசாயி’ என்று கூறி வருகிறார். இந்த ஒரிஜினல் விவ சாயி தலைமையில் உள்ள அதிமுக உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் விவ சாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்  சட்டத்திற்கு ஆதரவாக, மக்கள் விரோத  ஆட்சி நடத்தும் பாஜக அரசுக்கு ஆதர வாக வாக்களித்தனர் என்பது ஊரறிந்த செய்தி. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடி வுக்கு பின்னர், அதிமுகவின் எதிர்கால மும் முடிவுக்கு வந்துவிடும். ஏனென்றால் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, எடப் பாடி பழனிச்சாமி - இவர்களில் யார் அதி முகவிற்கு தலைமை தாங்குவார் என்பது முடிவுக்கு வந்துவிடும்.  நாகை நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளரை வாடகைக்கு கூட்டி வந்து  போட்டியிடுகின்றது அதிமுக. ஆனால்  இந்தியா கூட்டணி மட்டுமே, இம்மண் ணின் மைந்தரை, 40 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் வை.செல்வராஜை களத்தில் இறக்கியுள்ளது.  பாஜக இந்தியா முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகளை சிதைத்து வருகிறது. மாநிலக் கட்சிகளை சிதைத்து, அந்தக் கட்சிகளில் உள்ள ஒருவரை தன்னுடன் கூட்டணி கட்சியாக வைத்துக் கொள் கிறது. தெலுங்கானா, கர்நாடகா, மகா ராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட ஏனைய மாநி லங்களிலும் மாநிலக் கட்சிகளை உடைத்து, தனக்கு சாதகமான ஒருவரை  பிடித்து கூட்டணியாக மக்கள் மத்தியில்  காட்டுகிறது. ஆனால் இக்கூட்டணியா னது  ஜூன் 4 அன்றுக்குப் பிறகு சிதறி  ஓடிவிடும். மோடி எனும் தீய சக்தியை தேர்தலை விட்டு ஓட வைப்பது, இந்தியா  கூட்டணியில் அங்கம் வகிக்கிற ஒவ்வொரு  கட்சி உறுப்பினருக்கும் உள்ள தலையா யக் கடமை. 

விவசாய மானியம் ரத்து

‘இந்தியா’ என்ற பெரிய தேசத்தில்  பத்தாண்டு காலம் மோடி தலைமையி லான அரசு எதை சாதித்து இருக்கிறது. விவசாயிகளுக்கான மானியங்கள் ரத்து  செய்யப்பட்டு இருக்கின்றன. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் இடதுசாரி கட்சி களால் உருவாக்கப்பட்ட நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு, போதுமான நிதியை ஒதுக்காமல் அத்திட்டத்தையே நம்பி இருந்த மக்களின் வயிற்றில் அடித்தது இந்த பாஜக அரசு.  விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட டிராக்டர் மானியங்களை ரத்து செய்தது  மட்டுமல்லாமல், கொடுத்த டிராக்டர் களையும் பறிமுதல் செய்தது. ஆனால் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வாங்கிய பெரிய முதலாளிகளை வெளிநாட்டிற்கு ஓடச் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மோடிக்கு ஏழை என்றால் பிடிக்காது;  அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா என்று  உலக பணக்காரர்களை மட்டும்தான் அவ ருக்குப் பிடிக்கும்; அவர்களைத்தான் கொண்டாடுவார்.  கோடிக்கணக்கான ரூபாய் அவர் களுக்கு கடனாக வழங்குவார். 16  லட்சம் கோடி ரூபாய் பெரு முதலாளி களால் இந்திய வங்கிகளில் இருந்து கொள் ளையடிக்கப்பட்டு இருக்கிறது. பல லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு மானியம் என்ற பெயரில் முறை கேடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் முறையாக வரி செலுத்துகிற, பாஜக கூட்டணி அல்லாத மற்ற மாநில அரசு களுக்கு நிதி ஒதுக்குவதே கிடையாது. குறிப்பாக தமிழக அரசுக்கு எவ்வித நிதி யும் கொடுக்காமல் தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது இந்த மோடி அரசு. தமிழகத்தில் ஏற்பட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்களுக்கு எவ்வித நிதி யும் வழங்காமல், அப்போதெல்லாம் தமிழ் நாட்டு பக்கமே வராத மோடியும் அவரது தலைவர்களும், இப்போது வாரத்திற்கு இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து செல்கின்றனர். தமிழக மக்கள் மற்ற மாநில மக்கள் போல் அல்லாமல். மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உண்மை. 

கலவர மூட்டுதல்... பிளவை ஏற்படுத்துதல்

பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டி விட்டார்கள். இப்போது மதுரா மசூதியை குறி வைக்கிறார்கள். இந்த தேசத்தின் அழகிய பூமாலை போன்று இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவர் உள்ளிட்ட பிற மதத்தினர் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். மதங்களுக்குள் கலவரத்தை மூட்டி பிளவை ஏற்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் ஓட்டு வங்கி நாடகமாடுகிறார்கள்.  தேசத்தையே உலுக்கிய மணிப்பூர் கலவரம் பற்றி ஒரு வார்த்தைகூட பேசு வதில்லை. இக்கலவரத்தில் பாதிக்கப் பட்ட இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை மோடியும், மணிப்பூர் முதல் வரும் வேடிக்கைதானே பார்த்துக் கொண் டிருந்தார்கள்; என்ன செய்தார்கள் அந்த  மக்களுக்கு?. தேசத்தை நாசம் செய்கிற, மக்கள் விரோத போக்கை கடைப்பிடிக்கிற பல சட்டங்களை இவர்கள் அமல்படுத்தி இருக்கிறார்கள். மத்தியில் மோடியும், தமிழ்நாட்டில் எட்டப்பனாக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமியையும் இந்த  தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். கூட்டணி கட்சியில் உள்ள ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து, இந்தியா  கூட்டணியை வெற்றி பெறச் செய்ய  வேண்டும். எனவே தோழர் வை.செல்வ ராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சார பொதுக் கூட்டத்தில் சிபிஎம்  மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர்  சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி,  காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா, சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் கோ.பழனிச்சாமி, விடு தலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர்  நாக. அருட்செல்வன், சிபிஎம் மாவட்ட  செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள்,  ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
 

;