tamilnadu

img

ஆர்.டி.ஐ. ஆர்வலர் படுகொலை... பாஜக முன்னாள் எம்.பி. சோலங்கிக்கு ஆயுள் தண்டனை

அகமதாபாத்:
தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்.டி.ஐ) ஆர்வலர் அமித் ஜேத்வா படுகொலை வழக்கில் பாஜக முன் னாள் எம்.பி. டினு சோலங்கிக்கு, சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண் டனை வழங்கியுள்ளது.குஜராத்தின் ஜூனாகத் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் டினு சோலங்கி. இவர்,ஜூனாகத் அருகே உள்ள ‘கிர்’ சிங்கங்கள் சரணாலயத்தில் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை, தகவல்அறியும் சட்ட ஆர்வலரான அமித்ஜேத்வா வெளியுலகிற்கு அம்பலப் படுத்தியதுடன், சோலங்கி மீது குஜராத் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே, கடந்த2010-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி, அமித் ஜேத்வா, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் உயர்நீதிமன்றம் முன்பாகவே இந்தபடுகொலை நடந்தது.அப்போதும் கூட, ஜேத்வா படுகொலைக்கும், டினு சோலங்கிக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி, குஜராத் பாஜக அரசு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால், உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 

அதனடிப்படையில், ஜேத்வா படுகொலை பற்றி விசாரித்த சிபிஐ,பாஜக முன்னாள் எம்.பி. டினு சோலங்கி உட்பட 7 பேர் மீது 2016-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து நடை பெற்ற விசாரணையின் முடிவில்,  ஜேத்வாவை படுகொலை செய்ததாக டினு சோலங்கி உட்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எம். தாவே தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

;