tamilnadu

img

காவல்துறைக்கு வாக்கி - டாக்கி வாங்கியதில் ஊழல் 14 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை, பிப்.8- காவல்துறைக்கு தொழில்நுட்பக் கருவிகள் (வாக்கி-டாக்கி) வாங்கிய தில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி 14 காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு தனியார் நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை காவல்துறை தொழில்நுட்பப் பிரிவின் கீழ் காவல் துறையினருக்கு சிசிடிவி கேமரா, டேப்ளட் கணிணி,ஜி.பி.எஸ்,சி.சி.டிவி ஒளிபதிவு கருவி, பேட்டரிகள் ஆகிய தொலைத்தொடர்பு கருவிகள்,  வாங்கி யதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதற்கட்ட விசா ரணையில் ஈடுபட்டனர்.

அதில் கருவிகள் வாங்கியதில் தனி யார் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு  சில அதிகாரிகள்  முறைகேட்டுக்கு துணை போனதற்கு முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்தது.  இந்தநிலையில்,  தொழில்நுட்ப பிரிவு அப்போது தொழில்நுட்ப பிரிவு கண்காணிப்பாளராக இருந்த கண்கா ணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் 14 பேர் இரண்டு தனியார் நிறுவனத்தின் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக சென்னை யில்  காவல்துறை அதிகாரிகள் இல்லம், தனியார் நிறுவன அலுவலகங்கள் என 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அதிரடி சோதனை நடத்தி னர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பல சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். மேலும் விசாரணை தீவி ரமாக நடைபெற்றுவருவதாகவும் தெரி வித்தனர்.

;