tamilnadu

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி

ஈரோடு, ஜூலை 22- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும்  அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டதை அடுத்து 5 ஆவது தளம் சீல் வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாவது தளத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும்  45 வயதுடைய ஊழியர் ஒருவருக்கு கொரோனோ  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து  அவருடன் பணிபுரிந்த அலுவலகத்தில் உள்ள அனை வரையும் தனிமைப்படுத்தி கொரோனா தொற்று பரி சோதனை செய்யப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் உள்ள ஐந்தாவதுதளம் தற்கா லிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர்.

;