tamilnadu

img

ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கிய ”டியூஷன் டீச்சர்” கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவியை கொடூரமாக தாக்கியதில் டியூசன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரம்படி காயங்களுடன் கூடிய ஆறு வயது சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்நிலையில் அதை கவனித்த மாவட்ட குழந்தை நல அலுவலர், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலிசார், அக்குழந்தையை கண்டு பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்குழந்தையிடம் விசாரித்ததில் பெத்தேல்புரம் பகுதியை சார்ந்த ஜெஸிமோள் என்ற டியூசன் டீச்சரால் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜெஸிமோளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

;