tamilnadu

img

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என கணக்கில் இந்திய மகளிர் அணி வென்று அசத்தியுள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்றது. இதில் ஏற்கனவே நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது. அத்தொடரில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 45.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் மூன்றாவது தொடரிலும் வென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து அசத்தியுள்ளது. 
 

;