tamilnadu

img

தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்திடுக

நாமக்கல், மே 3-தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி திருச்செங்கோட்டில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

RICT-CSI ROLL OUT தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்புவெள்ளியன்று ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஞ்சல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.மாதேஸ்வரன், எம்.எம். துரைசாமி, பொன்னுசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், எஸ்.விஜயகுமார், எம்.ஜெகதீஸ்வரன், கே.சி. ராமச்சந்திரன், கே.சுப்பிரமணியன், ஜோதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 பெண் ஊழியர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், எஸ்.சந்திரசேகர் நன்றி கூறினார்.

;