tamilnadu

img

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: பாக்யராஜ் மீது புகார்

சென்னை:
பெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும்  நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆந்திர மகளிர் ஆணையம், தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாக்யராஜ், பாலியல் குற்றங்களுக்கு பெண்களும் ஒரு காரணம் என்றும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்றும் பேசியிருந்தார். இந்த நிலையில், ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒருசில சம்பவங்களை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த மகளிர் இனத் தையும் அவமதிக்கும் வகையில் பாக்யராஜ் பேசியிருப்பதாகவும் அவர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

;