tamilnadu

மூத்த பத்திரிகையாளர் டி.கே. ரவீந்திரன் காலமானார்...

சென்னை:
மாலைமுரசு குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர் டி.கே.இரவீந்திரன்(69) மரணம் அடைந்தார்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் கடந்த 19 ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்கவில்லை.மாலை முரசு குழுமத்திலிருந்து “நவீனம்” என்ற மலையாள மாத இதழ் வெளிவந்தது. அதன் ஆசிரியராக பொறுப் பேற்று சிறந்த பங்களிப்பை கொடுத்தார்.“தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்” என்கிற ஒரு ஆய்வு நூலையும் படைத்துள்ளார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஆளுமை கொண்டிருந்தவர். கேரளாவை பூர்வீகமாக கொண்டாலும் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் பத்திரிகை -இலக்கிய உலகிற்கு மகத்தான பங்களிப்பு செய்தவர். தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிக் கொண்டிருந்தார். கொரோனா காலத்திலும் அதற்கான வாசிப்பு, எழுத்து, தேடல் என்று முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருந்தார். இந் நிலையில்தான் அவர் கொரோனா கொடிய 
நோய் பிடியில் சிக்கினார். மறைந்த பத்திரிகையாளர் அரவிந்தனுக்கு டியுஜே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

;