tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1  முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 1  முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதியுள்ளனர்.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பிரிவுகளின், பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல்  28 ஆம் தேதி வரை (வாய்மொழித் தேர்வு) நேர்காணல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

;