tamilnadu

img

கரும்பு விவசாயிகளுக்கு ஆட்சியர் உறுதி: காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

திருவண்ணாமலை, ஆக. 20- கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. திருவண்ணாமலை தரணி சர்ச்சரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் வியாழனன்று (ஆக. 20) 3ஆவது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சு வார்த்தையில், 15 நாட்களுக்குள் நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

;