tamilnadu

img

பொன்னமராவதியில்  2 பேருக்கு எலிக் காய்ச்சல்

 பொன்னமராவதி, செப்.18- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இந்திராநகர் பகுதியில் டெங்கு பாதித்த இடங்களில் மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன், ரவீந்திரன், முத்தன், ராமலிங்கம் ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதேபோல பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி பகுதியில் இருவருக்கு எலி காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர்களுக்கு மேலச்சிவபுரி சுகாதார ஆய்வாளர் உத்தமன் தலைமையான குழுவினர் சிகிச்சை அளித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜ் உத்தரவின் பேரில் டெங்கு பாதித்த இந்திராநகர் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சரண்குமார், மேலைச்சிவபுரி அரசு சுகாதார நிலைய மருத்துவர் அருண்குமார், மருத்துவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;