tamilnadu

img

தில்லி வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்... மோடி அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

புதுதில்லி:
தில்லியில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத் தப்பட்ட வன்முறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றுபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:1984-இல் சீக்கியர் களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையைப் போல, தில்லி வன்முறையும் நாட்டைஉலுக்கியுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் ஒருநாள் நிகழ்வுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தில்லி வன்முறை தொடர்பாக வெளிப்படையான விவாதத்தை நடத்த வேண்டும். விவாதம் மூலமாக மக்களின் கேள்விகளுக்கப் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை என்றால், அது துரதிஷ்டவசமானது. இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

;