tamilnadu

img

நடிகைக்கு பாலியல் தொல்லை; பாஜக பிரமுகர் தலைமறைவு

ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சஞ்சனா. இவர் மாடலாகவும் தெலுங்கு சினிமாவில் நடிகையாகவும் இருந்து வருகிறார். அண்மையில் இவர் ஹைதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஹோட் டல் ஒன்றுக்குச் சென்றுள்ளார். இவர் சென்றிருந்த இரவு, தெலுங்கானா மாநில பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவரும்- சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் நந்தேஷ்வர் கவுடுவின் மகனுமான- ஆஷிஷ் கவுடுவும் அந்த ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் நடிகை சஞ்சனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த நடிகை சஞ்சனா, ஆஷிஷ் கவுடு மீது,துணிச்சலாக மந்தாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள் ளார். அதன்பேரில், ஆஷிஷ் கவுடுமற்றும் அவரது நண்பர்கள் மீது 354 மற்றும் 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.தெலுங்கானாவில் மருத்துவர் பிரியங்கா உட்பட 2 இளம்பெண்கள், கடந்த வாரம் கொடூரமான முறையில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவங்களுக்கு எதிராக தெலுங்கானாவில் அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.அப்போது, ‘நாங்களும் போராடுகிறோம்’ என்று காட்டிக் கொள்வதற்காக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் மாணவர் பிரிவானஏபிவிபியும் அதில் கலந்து கொண் டது. இந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்தான் ஆஷிஷ்கவுடு ஆவார். அதாவது, பகலில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிவிட்டு, இரவில் அவரே நடிகை ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். தற்போது நடிகை சஞ்சனாவின் புகாரைத் தொடர்ந்து ஆஷிஷ் கவுடு தலைமறைவாகி விட்டார்.

;