tamilnadu

img

ராஜபாளையம் எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா பாதிப்பு... 

விருதுநகர் 
தமிழக எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 16 எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 4 அமைச்சர்களும் அடங்கும். சென்னை சேப்பாக்கம் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஸ்ரீபெரும்பத்தூர் அதிமுக எம்எல்ஏ பழனி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மின்துறை அமைச்சர் தங்கமணி, செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தான், ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி அதிமுக எம்எல்ஏ அரசு ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் உட்பட மற்ற எம்எல்ஏ-க்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.    தங்கப்பாண்டியனின் மனைவி மற்றும் மகன்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர்.

;