court

img

தமிழக மினி கிளினிக் பணியாளர்கள்... தற்போதைய நிலையே தொடர நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
தமிழகத்தில் இரண்டாயிரம் “மினி கிளினி”க்குகளுக்கு தேர்வுசெய்யப்படும் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் ஏஜென்சி மூலம்தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்யக் கோரிய வழக்குஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


மதுரை வளர்நகர் பகுதியைச் சேர்ந்த வைரம் சந்தோஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  “தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பணிபுரியும் செவிலியருக்கு சம்பளமாக ரூ.14,000, மருத்துவ உதவியாளர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள 2000 இணை கிளினிக்குகளுக்காக 585 மருத்துவ உதவியாளர்கள், 1,415 செவிலியர்கள்  பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்காக சுகாதாரத்துறை இயக்குநர் 2020 டிசம்பர் 15-ஆம் தேதி பணியாளர்நியமனம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

இதன்படி தனியார் ஏஜென்சி மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் முன்பதிவு, இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. கொரோனா நோய்த் தொற்று நேரங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவது சரியானதாக இருக்க முடியாது. எனவே சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டு மென மனுவில் கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வுமுன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.அப்போது அரசுத் தரப்பில் வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய  கால அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு  வழக்கு விசாரணையை ஜனவரி 11-ஆம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

;