districts

கட்டுமானத் தொழிலாளர்கள்  சங்க கிளை அமைப்பு

தஞ்சாவூர், மே 4 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிக்குளத்தில், கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) புதிய கிளை அமைப்புக் கூட்டம், வீ.சாமிநாதன் தலை மையில் நடைபெற்றது. சிஐடியு ஒன்றியப் பொறுப்பாளர் முருக.சரவணன் பேசினார்.  இதில் 50-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாதம் பிரகாஷ் அமைப் பாளராக தேர்வு செய்யப்பட்டார். மாதம்தோறும் முதல் தேதி யில் கூட்டம் நடத்துவது, விரைவில் புதிய நிர்வாகிகளை தேர்வு  செய்வது, தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், நலவாரிய உதவிகளை வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;