tamilnadu

img

சங்க கிளை அமைப்பு 

 குடவாசல்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ரிஷியூர் ஊராட்சி ரிஷியூரில் பிரவிந்ராஜ் தலைமையில் 48 இளைஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந் தார்கள். அவர்கள் அனைவரையும் வரவேற்று சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் டி.பி. கிஷோர்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு பற்றி விளக்க உரையாற்றினார். ஒன்றிய பொருளாளர் ஏ.அருள்குமார் முன்னதாக இளைஞர்களை வரவேற்று உரையாற்றினார். மேலும் புதிய கிளை அமைக்கப்பட்டு புதிய தலைவராக பிரவிந்ராஜ், செயலாளராக ஹரி கிருஷ்ணன், பொருளாளராக காந்தி மற்றும் து. தலைவராக கார்த்திக், து.செயலாளராக மணி மந்திரி, அரவிந்த் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;