districts

img

பென்னாகரத்தில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி

பென்னாகரம், செப்.3-

பென்னாகரத்தில் வெள்ளியன்று புத்தக கண்காட்சி தொடங்கியது. தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் மற்றும் ப்யூவிஷன் கிளப் இணைந்து பென்னாகரத்தில் முதல் முறையாக புத்தகக் கண் காட்சி  நடைபெற்றது.

பென்னாகரம் பேருந்து நிலையம் பின்பு றம் உள்ள சமுதாய கூடத்தில் புத்தக கண்காட்சி செப்.5 ஆம் தேதியன்று வரை நடைபெற உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புத்தக பேரவை வட்டார ஒருங்கிணைப்பாளர் மா.பழனி தலைமை வகித்தார். இதில், ப்யூவிஷன் கிளப் நிர்வாகி எஸ்.மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் அ.சுதாகரன், ரா.அன்புவளவன், கோ. பழனி, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தக டூர் புத்தக பேரவைத் தலைவர் இரா.சிசுபாலன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீரமணி, பென்னாகரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலட்சுமி உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;