districts

கோயில் திருக்குளம் அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது

தஞ்சாவூர், ஏப்.24 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நீல கண்டப் பிள்ளையார் கோயில் திருக்குளம் அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.   பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் சித்ரா பௌர்ணமி 12 நாள் திருவிழா, கடந்த  ஏப்.14 அன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடை பெற்றது.  இந்நிலையில், காவல்துறை கட்டுப் பாட்டு அறை எண்.100-க்கு போன் செய்த  ஒருவர், பேராவூரணி நீலகண்டப் பிள்ளை யார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடி குண்டு உள்ளதாக கூறியுள்ளார். இதை யடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, சோதனையிட்டதில் வெடி குண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தேரோட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்தது.  தொடர்ந்து தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த காவல்துறையினர், மிரட்டல்  விடுத்தவரின் முகவரியைக் கண்டறிந்து, மயி லாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயி லைச் சேர்ந்த சிங்காரவேலு (35) என்ப வரை பிடித்து விசாரணை நடத்தினர். விசார ணையில், “கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு,  பேராவூரணி பிள்ளையார் கோவில் கும்பாபி ஷேகம் நடைபெறுவதற்கு முன்னாள் கோவி லில் ஸ்தபதியாக வேலை செய்ததாகவும், தேரோட்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல்  மூலம் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த போது, குடிபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு  அழைத்து வெடிகுண்டு இருப்பதாக தவறுத லாக உளறி விட்டதாகவும்” கூறியுள்ளார்.  இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பேராவூரணி காவல் துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்த னர். மேலும், அவரை பேராவூரணி நீதிமன்றத் தில் ஆஜர்ப்படுத்த சிறையில் அடைத்தனர்.

;