districts

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கல்

திருச்சிராப்பள்ளி, மே 31 - பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக, கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு பாரதப் பிரதமரின் பராமரிப்புத் திட்டத்தில்  நிதியுதவிக்கான வைப்பு பத்திரங் களை வழங்கி தொடங்கி வைத்தார். இதையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சிய ரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு திங்களன்று வழங்கினார்.  இதில் பிரதம மந்திரி பாதுகாப்புத் திட்ட  சான்றிதழ், ரூ.10 லட்சத்திற்கான வைப்புநிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கிக் கணக்கு புத்தகம், குழந்தைகளுக்கு பாரத பிரதமர்  எழுதிய கடிதம், பிரதம மந்திரி பாதுகாப்புத்  திட்டம் குறித்த விளக்க கையேடு, ஐந்து  வருடத்திற்கான ஆயுள் காப்பீட்டு அட்டை,  பள்ளிக்கூட பைகள் ஆகியவை அடங்கிய  பெட்டகம் 10 குழந்தைகளுக்கு வழங்கப்பட் டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவ லர் தஸ்தகீர், குழந்தைகள் நலக் குழுத்தலை வர் மோகன் மற்றும் குழந்தைகள் நலக் குழு  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

;