districts

img

மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பக் கருத்தரங்கம்

புதுக்கோட்டை,  மார்ச் 27 - எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் மக்காச்சோள படைப்புவை கட்டுப்படுத்து வதற்கான புதிய தொழில் நுட்ப அறிமுக கருத்தரங்கம் புதுக்கோட்டையை அடுத்த வம்பன் வேளாண்மை அறி வியல் நிலையத்தில் நடை பெற்றது. கருத்தரங்கிற்கு புதுக் கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவக்குமார் தலைமை வகித் தார். அவர் பேசுகையில், மக்காச்சோளத்தில் படைப் புழு தாக்குதல் மிகப்பெ ரிய சவாலாக உள்ளது. புதுக் கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோள சாகுபடி பரப்ப ளவு 6000 ஏக்கரில் இருந்து  1600 ஏக்கராக குறைந்துள்ளது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் முன் னெடுக்கும் இந்த ஆரா ய்ச்சிக்கு வேளாண்மைத் துறை முழு ஒத்துழைப்பை நல்கும் என்றார்.  இங்கிலாந்தில் செயல்ப டும் பயிர் நலன் மற்றும் பாது காப்பு நிறுவனத்தின் தேசிய மேலாளர் ஜெனாரோஸ் புதிய தொழில் நுட்பத்தை விளக்கிப் பேசுகையில், இந்த தொழில்நுட்பமானது, மக்காச்சோள படைப்புழு வைத் தாக்கும் ஆண்  பூச்சிகளை கவர்ந்து இழுக் கக் கூடிய இனக்கவர்ச்சிப் பொறிக்களை பயன்படுத்து வது. இந்த புதிய இனக் கவர்ச்சிப் பொறியில் சென்சா ருடன் தகவல்களை வழங்கக்  கூடிய சிம்கார்டு பொருத்தப் பட்டிருக்கும். இது சூரிய ஒளியில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண்மைத் துறை அலுவலர்கள் தாங்கள்  இருக்கும் இடத்திலிருந்தே புழு தாக்குதலின் நிலையை  அறிந்துகொள்ள முடியும். முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளில் ஈடுபட்டு பாதிப்பை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த முடியும் என்றார்.  நிகழ்வில் கே.பி. நிறுவன  விஞ்ஞானி வினோத் பண்டிட்,  செய்தி தொடர்பு அலுவலர் கிருத்திகா, வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிறு வன உதவிப்பேராசிரியர் ஆர்.ரமேஷ், வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் டி.செந்தில்குமார். இங்கிலாந்து பயிர் நலன் மற்றும் பாதுகாப்பு நிறுவன உதவி திட்ட அலுவலர் லாரா  ஒயிட், முன்னோடி விவசாயி வே.சு.காமராசு, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறு வன முதுநிலை விஞ்ஞானி ஆர்.கோபிநாத், செய்தி தொடர்பு அலுவலர் வி.பி. கவிதா ஆகியோர் கருத்துரை  வழங்கினர்.  முன்னதாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறு வன விஞ்ஞானி ஆர்.ராஜ் குமார் வரவேற்க, பயிர் மருத் துவர் சி.சுதாகர் நன்றி கூறி னார்.

;